டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் ராணிகஞ்ச் : தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' திரைப்படம் இன்று (அக்-6) வெளியாகி உள்ளது. இந்த படம் ஜஸ்வந்த் சிங் கில் என்கிற ராணுவ அதிகாரி ஒருவர் செய்த தியாகத்தை மையப்படுத்தி, நிஜ வாழ்க்கை கதையாக தயாராகியுள்ளது. இதில் ஜஸ்வந்த் சிங் கில் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படம் தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர் அதேசமயம் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சரியாக ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே நாள் அக்ஷய் குமார் நடித்த 'ஓஎம்ஜி-2' வெளியானது. அந்த படத்திற்கு இதே சென்சார் அதிகாரிகள் தான் 27 இடங்களில் கட் கொடுத்து, ஏ சான்றிதழும் வழங்கி அக்ஷய் குமாரை அப்செட் ஆக்கினார்கள்.
இன்னொரு பக்கம் நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்து எழுந்து நின்று கைதட்டிய இந்த அதிகாரிகளில் சிலர்தான், சமீபத்தில் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதும் ஆச்சரியமான ஒன்று.