'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் |
பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் ராணிகஞ்ச் : தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' திரைப்படம் இன்று (அக்-6) வெளியாகி உள்ளது. இந்த படம் ஜஸ்வந்த் சிங் கில் என்கிற ராணுவ அதிகாரி ஒருவர் செய்த தியாகத்தை மையப்படுத்தி, நிஜ வாழ்க்கை கதையாக தயாராகியுள்ளது. இதில் ஜஸ்வந்த் சிங் கில் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படம் தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தினர் அதேசமயம் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சரியாக ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே நாள் அக்ஷய் குமார் நடித்த 'ஓஎம்ஜி-2' வெளியானது. அந்த படத்திற்கு இதே சென்சார் அதிகாரிகள் தான் 27 இடங்களில் கட் கொடுத்து, ஏ சான்றிதழும் வழங்கி அக்ஷய் குமாரை அப்செட் ஆக்கினார்கள்.
இன்னொரு பக்கம் நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்து எழுந்து நின்று கைதட்டிய இந்த அதிகாரிகளில் சிலர்தான், சமீபத்தில் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதும் ஆச்சரியமான ஒன்று.