20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
துபாயை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. இந்த செயலியை விளம்பர படுத்துவதற்காக பாலிவுட் நடிகர், நடிகைகள் கோடி கணக்கில பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.