ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கடந்த சில நாட்களாகவே நமது நாட்டின் பெயரான இந்தியா என்பதை இனிவரும் காலத்தில் பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பெயரை மாற்றக்கூடாது என்று ஒரு தரப்பினரும், பாரத் என்கிற பெயர் நன்றாக தானே இருக்கிறது என ஆதரவாக ஒரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவாதம் மீடியாக்களிலும் சோசியல் மீடியாக்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து தேசபக்தி படங்களில் நடிக்கக்கூடிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தற்போது, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்தியா பாரத் விவாதம் கிளம்பியுள்ளதை தொடர்ந்து படத்திற்கு, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ' என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அக்ஷய் குமார் தான் பதிவிடும் டுவீட்டுகளில் எல்லாம் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்றே குறிப்பிட்டு வருகிறார். அதேசமயம் படத்தின் நாயகி பரிணிதி சோப்ரா, ‛இந்தியா' என்றே குறிப்பிட்டு வருகிறார்.