விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் | 'குய்கோ'விற்கு உயிரோடு அஞ்சலி வைத்துவிட்டார்கள் - இயக்குனர் வருத்தம் | ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து |
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி வெளியானது அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது இந்த படம் 44 கட்டுகளுடன் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் தியேட்டர்கள் மூலம் திரையீடு தடுக்கப்பட்டது. படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. படத்தால் எங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், இது மாதிரி படங்களுக்கு பாரதிய ஜனதாக கட்சி நிதி உதவி செய்கிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததது. “அரசால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிட அனுமதிக்கப்பட்ட படம் நாடு முழுவதும் திரையிடப்படும்போது மேற்கு வங்க அரசு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதோடு இதுகுறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு படத்திற்கு பாதுகாப்பு வழங்காத தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.