'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி வெளியானது அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது இந்த படம் 44 கட்டுகளுடன் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் தியேட்டர்கள் மூலம் திரையீடு தடுக்கப்பட்டது. படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. படத்தால் எங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், இது மாதிரி படங்களுக்கு பாரதிய ஜனதாக கட்சி நிதி உதவி செய்கிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததது. “அரசால் தணிக்கை செய்யப்பட்டு வெளியிட அனுமதிக்கப்பட்ட படம் நாடு முழுவதும் திரையிடப்படும்போது மேற்கு வங்க அரசு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதோடு இதுகுறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதோடு படத்திற்கு பாதுகாப்பு வழங்காத தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.