தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

ராக்கெட்ரி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் மற்றும் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படம் என தமிழில் தற்போது மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் மாதவன். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மும்பையில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தை கங்கனா ரணாவத் கதையின் நாயகியாக நடித்த குயின் என்ற படத்தை இயக்கிய விகாஸ் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.