மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ராக்கெட்ரி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் மற்றும் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படம் என தமிழில் தற்போது மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் மாதவன். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மும்பையில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தை கங்கனா ரணாவத் கதையின் நாயகியாக நடித்த குயின் என்ற படத்தை இயக்கிய விகாஸ் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.