ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

தமிழில் ராஜா ராணி மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ன படம் ஜவான். இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான்தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜவான் வெளியீடு தாமதமாவது குறித்த ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க, பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை. படக்குழுவினர் அனைவரும் சிறிதும் இடைவேளையின்றி பணியாற்றி வருகிறார்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஜவான் ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லி மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது” என்றார்.




