பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழில் ராஜா ராணி மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ன படம் ஜவான். இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான்தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜவான் வெளியீடு தாமதமாவது குறித்த ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க, பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை. படக்குழுவினர் அனைவரும் சிறிதும் இடைவேளையின்றி பணியாற்றி வருகிறார்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஜவான் ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லி மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது” என்றார்.