கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

தமிழில் ராஜா ராணி மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ன படம் ஜவான். இதில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் தற்போது செப்டம்பர் 7ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான்தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஜவான் வெளியீடு தாமதமாவது குறித்த ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க, பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை. படக்குழுவினர் அனைவரும் சிறிதும் இடைவேளையின்றி பணியாற்றி வருகிறார்கள், தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தற்போது அனைவரும் தங்களது வேலையை எளிதாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
ஜவான் ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லி மற்றும் அவரது குழுவினரின் அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது” என்றார்.