பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! | கமர்ஷியல் படங்களில் உச்சம் தொடுவேன் - திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் | மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவந்த சன்னி லியோன் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இன்று (பிப்-5) மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள கட்டகஞ்சே பங்க் என்கிற பகுதியில் நடைபெற உள்ள பேஷன் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் சன்னி லியோன்.
அதேசமயம் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த பேஷன் ஷோ நடைபெறுமா ? அப்படியே நடைபெற்றாலும் சன்னி லியோன் அதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.. கதர் மற்றும் கைத்தறி துணிகளை புரமோட் பண்ணும் விதமாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.