20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவந்த சன்னி லியோன் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இன்று (பிப்-5) மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள கட்டகஞ்சே பங்க் என்கிற பகுதியில் நடைபெற உள்ள பேஷன் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் சன்னி லியோன்.
அதேசமயம் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த பேஷன் ஷோ நடைபெறுமா ? அப்படியே நடைபெற்றாலும் சன்னி லியோன் அதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.. கதர் மற்றும் கைத்தறி துணிகளை புரமோட் பண்ணும் விதமாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.