சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் புளோரா. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தார்.
இந்த நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புளோரா. அதில் அவர் கூறியிருப்பதாவது: 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். ஹிந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அவர் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார். எனது அந்தரங்க உறுப்புகளில் அடித்து காயப்படுத்தினார். என் செல்போனை பறித்து கொண்டு நான் சீரியல்களில் நடித்து வந்ததை தடுத்தார்.
14 மாதங்களாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். அவரிடமிருந்து தப்பி என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன். தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்ல கற்றுக் கொண்டுவிட்டேன். இனி படங்களில் தீவிரமாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.