நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பெருமையை இழந்து, தென்னிந்தியப் படங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தது. இழந்த அந்தப் பெருமையை தற்போது 'பதான்' படம் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.
படம் வெளியான 5 நாட்களில் மட்டும் 543 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி மொத்த வசூலாகவும், வெளிநாடுகளில் 208 கோடி ரூபாய் மொத்த வசூலாக அமைந்துள்ளது.
ஒரு ஹிந்திப் படம் அதி வேகமாக 500 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்ற முதல் படம் 'பதான்' என்ற சாதனையைத் தற்போது புதிதாக படைத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பெரும் வெற்றிப்படமாக 'பதான்' அமைந்துள்ளது. ஹிந்திப் படங்களின் வசூலில் மேலும் சில புதிய சாதனைகளை இப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.