‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டில்லியில் நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்தாக சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் காங்கிரஸ் எம்.பி.யான சுரேஷ் கல்மாடிக்கு தொடர்பு இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து, சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சுரேஷ் கல்மாடி மற்றும் மத்திய விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர்கள் சிலரின் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுரேஷ் கல்மாடியின் கடைசிநேர விருப்பத்தின்படி, காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இதற்காக அரசுப் பணத்திலிருந்து ரூ.71.73 லட்சம் ஷில்பா ஷெட்டிக்கு வழங்கப்பட்டதாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஷில்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.