இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசூழல் பாதுகாப்புக்காக சேவையாற்றி வருகிறவர்களுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் சுற்றுச்சூழல்வியலாளர் அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அன்னை தெரசா விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா நடந்தது, மகாராஷ்டிரா மாநில கவர்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த விருதை தியா மிர்சாவுக்கு வழங்கினார். தியா மிர்சா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வெளிவந்த என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.