இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் ஒரு சுரங்க என்ஜினீயர். 1989ம் ஆண்டு மேற்கு வங்க சுரங்கம் ஒன்றில் அவர் பணியாற்றியபோது சுரங்கத்தில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியபோது அதனை தனது சமயோசித மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர்களை மீட்டார். இதனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திலும், பஞ்சாபிலும் நிஜ ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். 2019ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது வாழ்க்கை தற்போது சினிமாவாகி வருகிறது. இதில் ஜஸ்வந்த் சிங்காக அக்ஷய்குமார் நடிக்கிறார். நிஜ ஜஸ்வந்த் சிங் லண்டனில் படித்தவர். அந்த காட்சிகள் இப்போது லண்டனில் படமாகி வருகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்ஷய்குமாரின் ஜஸ்வந்த்சிங் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமர் வைத்திருக்கும் செயற்கை தாடியும், முதிர்ச்சியான முகமும் சற்றும் ஜஸ்வந்த்சிங் போன்று இல்லை என்றும், செயற்கையான மேக்அப் மூலம் அக்ஷய்குமார் நடிப்பதை விட ஜஸ்வந்த்சிங் தோற்றம் கொண்ட ஒருவரை கொண்டு படத்தை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மாமன்னன் பிருத்விராஜின் தோற்றத்தை கெடுத்தது போன்று ஜஸ்வந்த் சிங் தோற்றத்தை அக்ஷய்குமார் கெடுக்க வேண்டாம் என்றும் கூறிவருகிறார்கள்.