இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் ஒரு சுரங்க என்ஜினீயர். 1989ம் ஆண்டு மேற்கு வங்க சுரங்கம் ஒன்றில் அவர் பணியாற்றியபோது சுரங்கத்தில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியபோது அதனை தனது சமயோசித மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர்களை மீட்டார். இதனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திலும், பஞ்சாபிலும் நிஜ ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். 2019ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது வாழ்க்கை தற்போது சினிமாவாகி வருகிறது. இதில் ஜஸ்வந்த் சிங்காக அக்ஷய்குமார் நடிக்கிறார். நிஜ ஜஸ்வந்த் சிங் லண்டனில் படித்தவர். அந்த காட்சிகள் இப்போது லண்டனில் படமாகி வருகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்ஷய்குமாரின் ஜஸ்வந்த்சிங் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமர் வைத்திருக்கும் செயற்கை தாடியும், முதிர்ச்சியான முகமும் சற்றும் ஜஸ்வந்த்சிங் போன்று இல்லை என்றும், செயற்கையான மேக்அப் மூலம் அக்ஷய்குமார் நடிப்பதை விட ஜஸ்வந்த்சிங் தோற்றம் கொண்ட ஒருவரை கொண்டு படத்தை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மாமன்னன் பிருத்விராஜின் தோற்றத்தை கெடுத்தது போன்று ஜஸ்வந்த் சிங் தோற்றத்தை அக்ஷய்குமார் கெடுக்க வேண்டாம் என்றும் கூறிவருகிறார்கள்.