தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான குப்ரா சயித், 'சுல்தான், ரெடி அண்ட் சிட்டி ஆப் லைப் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ஓபன் புக்' என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார். இதில் அவர் சிறுவயதில் இருந்து அவருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த இந்த பாலியல் துன்புறுத்தல்களை என் மீது கருணை காட்ட வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. பாலியல் துன்புறுத்தல் அனுபவத்தைப் பற்றி பேசுவது அவ்வளவு எளிதானது அல்ல. அது நீண்ட நாள் காயத்தை தரும். பாலியல் குற்றங்களை பகிர்ந்து கொள்ளும்போது மக்களிடமிருந்து எதிர் விமர்சனங்களை வரும். இதனால் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் சமூகம் நினைக்கிறது. இந்த மனோபாவம் சில ஆண்களை ஊக்கப்படுத்தத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.