சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

அசாமிய திரைத்துறையில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர் கிஷோர் தாஸ். நடிகர் மட்டுமல்லாது முன்னணி அசாமிய பாடகரும்கூட. 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய படத்தில் நடித்து இருந்தார்.
31 வயதான கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கொண்டு வரப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அசாம் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வரின் வேண்டுகோள்படி சென்னையிலேயே கிஷோரின் இறுதி சடங்குகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது.