ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தன் திரையுலக வாழ்க்கை பற்றியும், தன்னைப் பற்றியும், சமீபத்தில், மீடியாக்களுக்கு, மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் தோற்றத்தை பார்க்கும்போது, சாப்ட்டான பொண்ணு மாதிரித் தான், இருக்கும். ஆனால், உண்மையில், நான், கொஞ்சம், கரடு முரடான ஆளு. சுருக்கமாக கூறினால், ஒரு சில விஷயங்களில், என் பேச்சை, நானே கேட்க மாட்டேன். முடிவெடுத்தால், முடிவெடுத்தது தான் என, சிரித்த தீபிகா,"என்னுடைய வேலையிலும், அத்தனை சீக்கிரமாக திருப்தி அடைந்து விட மாட்டேன். படப் பிடிப்பின்போது, டைரக்டரே, ஓ.கே., கூறினாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, "சார், ஒன்மோர் டேக் போகலாம் என, கேட்டு வாங்குவேன்.
பல பெரிய நடிகர்கள், என் நடிப்பை பாராட்டினர். என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் பாராட்டைத் தான், விலை மதிப்பில்லாததாக கருதுகிறேன். ரசிகர்களின் கைதட்டல்கள், விசில்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த உலகில், வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை என, உணர்ச்சிவசப் படுகிறார், தீபிகா.