இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்படும் 94வது அகாடமி விருதுகளுக்கான போட்டிக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் படமாக தமிழில் வெளியான கூழாங்கல் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நயன்தாரா , விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளனர்.
சர்தார் உதம், மண்டேலா, ஷெர்னி உள்பட 14 படங்கள் போட்டியிட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூழாங்கல் தேர்வானது, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேர்வு குழு சார்பில் அதன் உறுப்பினர் இந்திரதீப் தாஸ்குப்தா கூறியதாவது: சர்தார் உதம் திரைப்படம் நல்ல படம்தான். ஆனால் இப்படம் அதிகம் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை சித்தரிக்கிறது, மேலும் இப்படம் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைப் பற்றி இயல்புக்கு மாறாக நீளமாக சித்திரிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இதுவரை வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு போராளியைப் பற்றி பெரும் பொருட்செலவில் படம் எடுப்பது நேர்மையான முயற்சி என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் திரைப்பட உருவாக்கத்தில், அது மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் மீதான நமது வெறுப்பை வெளிப்படுத்துவதாகத்தான் இது இருக்கிறது. உலகமயமாக்கலின் இந்த காலகட்டத்தில், இந்த வெறுப்பை இன்னமும் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மற்றபடி படத்தின் தயாரிப்பு சர்வதேச தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. என்றார்.