2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதியில் நின்றிருந்த தனது படங்களின் படப்பிடிப்புகளை ஒவ்வொன்றாக முடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் மலையாளத்தில் குறூப், சல்யூட் மற்றும் தமிழில் ஹே ஷினாமிகா ஆகிய படங்களை முடித்துவிட்ட துல்கர் சல்மான், இந்தியில் சுப் என்கிற படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கருக்கு இது மூன்றாவது படம். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் பால்கி தான் இந்தப்படத்தை இயகியுளார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.