டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பாதியில் நின்றிருந்த தனது படங்களின் படப்பிடிப்புகளை ஒவ்வொன்றாக முடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான்.. அந்தவகையில் மலையாளத்தில் குறூப், சல்யூட் மற்றும் தமிழில் ஹே ஷினாமிகா ஆகிய படங்களை முடித்துவிட்ட துல்கர் சல்மான், இந்தியில் சுப் என்கிற படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கருக்கு இது மூன்றாவது படம். இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் பால்கி தான் இந்தப்படத்தை இயகியுளார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.