பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் குறைந்து விட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில பிரபலங்கள் அவ்வப்போது கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தான் கடந்த மாதம் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததாக தற்போது கூறியுள்ளார்.
கடந்த மாதம் டைகர்-3 படப்பிடிப்பிற்காக ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவுக்கு சென்றிருந்தபோது அங்கே கொரோனா பாசிடிவ் என்பது உறுதியாகி, நான்கு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டேன் என்று கூறியுள்ளார் இம்ரான் ஹாஸ்மி. இந்தியாவிலிருந்து விமானம் ஏறும் முன்போ, அல்லது விமானத்தில் பயணித்த சமயத்திலோ தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி ஒரு மாதம் கழித்து அவர் இதை கூறுவதற்கு காரணம் இருக்கிறது. அவர் தற்போது நடித்துள்ள டைபக் என்கிற ஹாரர் படம் வரும் அக்-29ல் வெளியாக இருக்கிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் இம்ரான் ஹாஸ்மி, தனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதையும் ஒரு பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி வருகிறார் என்றே பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.