போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காலம் சில நேரத்தில் கலைஞனையும், ரசிகனையும் கூரான இருமுனை கத்தியின் முன்பாக நிறுத்தி வேடிக்கை பார்த்து விடுகிறது. அப்படி ஒரு சூழலில், உங்களையும் எங்களையும் நிறுத்தியிருக்கிறது, உணர்ச்சி வேகத்தில் நீங்கள் உதிர்த்த, 'சைக்கோ' என்ற வார்த்தை. இரண்டு ஆண்டுகள் கழித்து, 'வடிவேலு வந்துட்டான்ய்யா...வந்துட்டான்' என, திரையரங்கிற்கு ஓடோடி வந்த எங்களை, பொறிக்குள் சிக்க வைத்து விட்டது உங்களின் 'எலி!' நாயகனாக நடித்து தான் நீங்கள் எங்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது உங்களுக்கும் நன்றாக தெரியும். இன்றும், கைபுள்ளயும், நாய்சேகரும், அலார்ட் ஆறுமுகமும் எங்கள் வீட்டு குழந்தைகள்கூட நகைத்து சுவைக்கும் நாயகர்கள் தான். 'எலி' மட்டும் எங்களை எப்படி கடித்தது? தன் 100வது திருட்டுக்கு 'போஸ்டர்' ஒட்டிவிட்டு திருடப் போகும்,'ஸ்டைல் பாண்டி'யின் அப்பாவித் தனம், ஐ.ஜி., வீட்டில் திருடி, அங்கே வரும் போலீசுக்கு, 'டேக்கா' கொடுக்கும் எலிச்சாமியிடம் இல்லை. இதுதான் 'எலி'யின் பானையில் இருக்கும் ஒரு சோற்று பதம். உங்களின் முந்தைய மூன்று நாயக அவதாரங்களும், மன்னர் காலத்தை சேர்ந்தவை. ஆனால், எலிச்சாமி எங்கள் நூற்றாண்டு மனிதன்; எங்கள் மனிதன் இல்லை. எதிரியின் கோட்டைக்குள் நுழையும் அவனின் ரகசிய உளவாளி வேடம், கூத்தாடிக்கு மாட்டிவிட்ட கோட்டு சட்டையாய், கொஞ்சம்கூட பொருந்தவில்லை. உழைப்பவனின் களைப்பை போக்கி மகிழ்விக்கும் கூத்தாடி, அவனை ஏமாற்றும்போது ஏற்படும் வலிதான் எலிக்கு நாங்கள் காட்டிய எதிர்வினை... போகட்டும்!
கலைஞனுக்கும் ரசிகனுக்குமான ஊடல் என்பது, காற்றில் கரையும் கற்பூரம் போன்றது. அது, கலைஞனின் திறமையால் எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நாங்களும் மீண்டு வரப்போகும் எங்கள் கலைஞனுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...
உங்கள் ரசிகன்