டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சினிமாவில் எவ்வளவு வளர்ந்தாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு சிலர் தான். ஓரிரு படங்களில் நடித்த உடனே தனி மேனேஜர், பிஆர்ஓ என வைத்துக் கொண்டு தாம் தூம் என அட்டகாசம் செய்யும் நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
'சிறைவாசி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த மகாபாரதப் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் பெயரைக் கொண்ட நடிகர் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று தான் பதில் வருகிறதாம்.
'ஆசிரியர்' படத்தில் நடித்த பிறகும் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்த பின்னும் இப்போதே தன்னை டாப் நடிகர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டுள்ளாராம். இப்படியான பலரை தமிழ் சினிமா உலகம் பார்த்துவிட்டது. இப்படி ஆட்டம் போட்ட பலர் கடைசியில் சினிமாவைவிட்டே அப்பால் போய்விட்டார்கள் என்று அந்த நடிகரை நினைத்து சிலர் வருத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்வாரா நடிகர் ?.