பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் நடிக்க வந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்து வந்தவர் அந்த நடிகை. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இரட்டை வேடத்தில் நடித்த படத்திலிருந்து தான் இந்தச் சறுக்கல் எனக் கருதுகிறாராம் நடிகை. அதனால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை. புதிதாக கதை சொல்ல வருபவர்களிடமும் இதனை கறாராகச் சொல்லி விடுகிறாராம். திருமண சமயத்தில் நடிகைக்கு இதே போன்ற கதாபாத்திரம் தான் விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கித் தந்தது. அப்போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவர், இப்போது இப்படி நினைக்கிறாரே...