ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு விருது வழங்கும் விழாக்கள் நடந்து வருகின்றன. முக்கியமான சில நடிகர்கள், நடிகைகள் பணம் கொடுத்தாவது வரவழைத்து விடுகிறார்கள். இதற்காகவே சிலர் செயல்படுகின்றனர்.
முன்னணி நடிகைகளை அழைத்து வந்தால் அவர்களுக்குத் தரும் பணத்தில் இவர்களுக்கென தனியாக கமிஷன் தருகிறார்களாம். இது தெரியாமல் சில நடிகைகள் கூட விழாக்களுக்குச் சென்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள சென்றவர்களை விழாக் குழுவினர் ஒழுங்காகவே நடத்தவில்லையாம். பலருக்குத் தனியாக கார் கூட ஏற்பாடு செய்து தரவில்லையாம். மேலும் விழாவைப் பார்க்க குறைந்த அளவிலேயே கூட்டம் வந்துள்ளது.
சென்னையில் நடக்கும் திரைப்பட இசை விழாக்களுக்கே 500, 5000 பேர் வரும் நிலையில் ஒரு பெரிய விழா என்று விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு 150 பேர் மட்டுமே வந்தது அங்கு சென்ற நட்சத்திரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். இனிமேல், திரைப்பட விருது விழா என்றாலே கலந்து கொள்ள யோசிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்.