சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? |
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். மர்மதேசம், ரமணி வெசஸ் ரமணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கீதா கைலாசம் தன் நடிப்பு வாழ்க்கையை நாடகத்தில் இருந்து தொடங்கினார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய சாரதா டீச்சர் நாவலை மேடை நாடகமாக்கி அதில் சாராதா டீச்சராக நடித்தார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தார்.
கைலாசத்தின் மறைவுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். கட்டில் என்ற படத்தின் மூலம் அறிமுமாகி இருக்கிறார். இந்த படம் வெளிவரும் முன்பே பா.ரஞ்சித் இயக்கும் சர்பேட்டா பரம்பரை, நடிகர் அரவிந்த்சாமி இயக்கும் படம், பெப்பின் ஜார்ஜ் இயக்கும் படம் , ஒரு புதுமுகம் இயக்கும் படம் என தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை, மற்றும் நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.