100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சில ரசிகர்கள் அண்மையில் லைவ்வில் வந்த பிரியங்காவிடம் நீங்கள் இப்போது சிங்கிளா? என்று கேள்வி கேட்க, அதற்கு பிரியங்கா ஆமாம் என்று கூறி தனது கணவரை பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் வர்மாவை திருமணம் செய்த பிரியங்கா, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்துள்ளார்.