கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை' சீரியலின் மூலம் அறிமுகமான நிதின் கிரிஷ், தற்போது செவ்வந்தி தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ராகவ் இறந்து போனது போல் காண்பிக்கப்பட்டதால், நிதின் கிரிஷ் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தான் ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிதின் கிரிஷ் செவ்வந்தி தொடரிலிருந்து விலகுவதாக தனது இண்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் சொல்லியது போல் எனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை தரவில்லை. நடிகராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. புரொமோஷன்களுக்கு கூட அழைக்கவில்லை. விரைவில் என்னுடைய இரண்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சில மணி நேரங்களுக்குள் நீக்கிவிட்டு மற்றொரு பதிவில் லீகல் காரணங்களுக்காக பழைய பதிவை நீக்கியதாகவும், புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம் விரைவில் இரண்டு புதிய அறிவிப்புகள் வரும் என்றும் செவ்வந்தி சீரியலை விட்டு விலகியதை நிதின் க்ரிஷ் உறுதிபடுத்தியுள்ளார்.