தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

பாகுபலி படத்தின் மூலம் மற்ற மொழி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என உயர்ந்துவிட்டார் பிரபாஸ். தற்போது அவருடைய சம்பளம் 150 கோடி என்கிறது டோலிவுட் வட்டாரம்.
ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், சலார், ஆதி புருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து மகாநடி இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள ஸ்பிரிட் படத்தையும் அறிவித்துவிட்டார். இந்தப் படங்கள் இல்லாமல் மீண்டும் சலார் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படத்தையும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தையும் விரைவில் அறிவிக்க உள்ளாராம்.
இவற்றை எல்லாம் பிரபாஸ் முடித்துக் கொடுக்க 2021 ஆகிவிடும் என்கிறார்கள். முடித்த, நடிக்கும், அறிவித்த, அறிவிக்க உள்ள என 7 படங்கள் கைவசம் உள்ளது பிரபாஸுக்கு. ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளம் என்றால் அடுத்த நான்கு வருடங்களில் 1050 கோடி சம்பாதித்துவிடுவார்.




