கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் |
மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அதன்பின் படங்கள் சரியாக அமையாத நிலையில் மீண்டும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இடையில் மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றவரை, சமீபத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தில் தான் பார்க்க முடிந்தது.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக நடித்திருந்தார் அஜ்மல். இந்தநிலையில் மீண்டும் நயன்தாராவுடன் இன்னொரு படத்திலும் இணைந்து நடிக்கிறார் அஜ்மல். மலையாளத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிக்க அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் படத்தில் அஜ்மலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தானே கூறியுள்ள அஜ்மல், இந்தப்படம் அல்போன்ஸ் புத்ரனின் நேரம் படம் பாணியில் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.