ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஓடிடி தளத்தில் வெளியான 'த பேமிலிமேன் 2' வெப் தொடர் அவரை ஹிந்தி பேசும் ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. அந்தப் பிரபலத்தை வைத்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தாவை நடிக்க வைக்க பேசுவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது புதிய வெப் தொடர் அல்லவாம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 'பாகுபலி' படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமவுலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது. தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். ஆனால், அத்தொடர் ஒளிபரப்பும் அளவிற்குத் தகுதியானதாக இல்லை என அத்தொடரை அப்படியே நிராகரித்தது.
அத்தொடரில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூரும் மீண்டும் இத்தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டார். வேறு இயக்குனர், வேறு நடிகையை வைத்து அத்தொடரை மீண்டும் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்து பெரும் தொகை சம்பளம் தருவதாகச் சொல்லி சமந்தாவிடம் 'சிவகாமி' தொடரில் நடிக்க பேசியதாம். சமந்தா நடித்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என நினைத்த நிறுவனத்திடம் தொடரில் நடிக்க விருப்பமில்லை என சமந்தா நிராகரித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்க சமந்தா நினைக்கிறார் என்றும் ஒரு தகவல்.