300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகராக சந்திரமோகன் திரையுலகத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய சந்திரமோகன் பத்திரிகையாளர்களிடம் தனது ஓய்வு முடிவு பற்றி தெரிவித்துள்ளார்.
1966ம் ஆண்டு வெளிவந்த 'ரங்குல ராட்டினா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். அதன்பின் கடந்த 55 வருடங்களாக எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளில் இதுவரையிலும் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளிவந்த 'நாளை நமதே' படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.
கடைசியாக 2017ல் வெளிவந்த 'ஆக்சிஜன்' படத்தில் நடித்தார். நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். இனி, வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.