'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு |

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பார்த்திபன் அவ்வப்போது தனது பதிவுகள் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் கமெண்டுக்கும் பதிலளித்து வருகிறார். தற்போது தனது டுவிட்டரில், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்பதை கூறும் வகையில், ‛‛நாளை சிரிக்க சிறக்க இன்றும் உள்ளிருப்போம் உறவே'' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஒருவர், ‛உள்ளிருந்தால் உணவு யாரு தருவாங்க?' என்று ஒரு நெட்டிசன் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பார்த்திபன், ‛‛சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தால் உணவை உண்ண நாம் இருப்போம். நாளை இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்'' என்று அந்த நபருக்கு நச் பதில் கொடுத்துள்ளார் பார்த்திபன்.




