டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




