ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கொரோனா பரவலின் அடுத்த கட்ட தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் தியேட்டர்களையும் இரவு நேர ஊரடங்கு சிக்கலில் தள்ளியுள்ளது. அதன் காரணமாக இரவுக் காட்சிகளை நடத்த முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தலைவி, எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்களை தள்ளி வைத்துவிட்டார்கள். இதனிடையே, இரவுக் காட்சிகள் இல்லை, ஞாயிறு காட்சிகள் இல்லை என்பது தங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும் என தியேட்டர்காரர்கள் கருதுகிறார்கள்.
தற்போது அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள். தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம்.