ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் |
விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து தேசிய விருது பெற்றுள்ளார் டி.இமான். மீண்டும் அதே சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார் இமான். இந்த நிலையில், தேசிய விருது பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் டி.இமான் கூறுகையில், இந்தமுறைதான் முதன்முதலாக தேசிய விருது அறிவிப்பை நான் லைவ்வாக பார்த்தேன். அப்போது என் பெயரை அறிவித்தபோது என்னையுமறியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தேன். விருது அறிவிக்கப்பட்ட பிறகு ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் வாழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
மேலும் இந்த அறிவிப்பு வெளியான பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் நான் இசையமைத்த பாடலுக்கு ரஜினி சார் நடனமாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். முன்னதாக, அந்த பாடலுக்கு தான் நடனமாடுவதற்கு முன்பு எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை மைக்கில் அறிவித்திருக்கிறார் ரஜினி சார். அதைக்கேட்டு அனைவரையும் கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். நான் சற்று தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். நான் சென்றபோது ஸ்பெசலாக கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்று தெரிவித்துள்ள டி.இமான், ரஜினியின் படையப்பா படத்தின் சிங்கநடை போட்டு என்ற ஓப்பனிங் பாடலை தியேட்டரில் பார்த்து ரசித்தவன் நான். இப்போது நானே ரஜினிக்கு அண்ணாத்த படத்தில் ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அப்படி நான் ரஜினிக்காக கம்போஸ் செய்த பாடலை மறைந்த எஸ்.பி.பி. அவர்கள் பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் திரையில் வர இருப்பதை நினைக்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் டி.இமான்.