காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொரோனா ஊரடங்கு முடிந்து 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். சில பெரிய படங்கள் தியேட்டருக்கு வந்தாலும் பல படங்கள் ஓடிடி தளத்திற்கு செல்கின்றன.
இதற்கிடையில் விபிஎப் நிறுவனங்கள் அறிவித்துள்ள கட்டண சலுகை வருகிற மார்ச் 31ந் தேதியுடன் முடிகிறது. விபிஎப் கட்டணத்தை கட்ட மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் என்பதில் தியேட்டர் உறுதியுடன் இருக்கிறார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் பல சுற்று பேச்சு நடத்தியும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் வருகிற மார்ச் 1ந் தேதி முதல் தியேட்டர்களை மூட தியேட்டர் அதிபர்கள் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.ூ.




