ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்களைத் திறந்தனர். ஆனால், வெளியான சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்தால் தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதன்படியே நடந்தும் விட்டது. உலக அளவில் 'மாஸ்டர்' படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
இதனிடையே, 'மாஸ்டர்' படம் கொடுத்த தைரியத்தால் அடுத்தடுத்து சில படங்களை தியேட்டர்களில் வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த வாரம் “களத்தில் சந்திப்போம், கபடதாரி” ஆகிய சிறிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.
பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் மீது தான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயாராக உள்ள வேறு சில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சில ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தயாரிப்பாளர்களை அணுகி பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.