ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டமான திரைப்படம் என்ற பெயரைப் பெற்ற '2.0' படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இந்தப் படம் வெளியாகாததால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை. ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வாங்கப்பட்ட விலை அதிகம் என்பதால் ஒரு ஏரியாவைத் தவிர மற்ற ஏரியாக்களில் நஷ்டம் வரும் என்கிறார்கள். 72 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இந்தப் படம் இதுவரையில் 52 கோடி ரூபாயை ஷேர் ஆகத் தந்துள்ளது. 72 கோடி ரூபாயை வசூலிக்க இன்னும் 20 கோடி தேவை. ஆனால், மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தின் வசூல் தற்போது குறைந்துவிட்டது. அதனால், பாக்கித் தொகையான 20 கோடி வசூலிக்க வாய்ப்பில்லை.
தெலுங்கின் முக்கிய ஏரியாவான நிஜாம் ஏரியாவில் மட்டும் 2.0 படம் 23 கோடி ஷேர் கொடுத்துள்ளது. அந்த ஏரியாவில் மட்டும் வாங்கிய தொகைக்கும் அதிகமான ஷேர் கிடைத்து படம் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.