விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இயக்குனர் பேரரசுவிடம் உதவியாளராக இருந்தவர் முரபாசெலன். இப்போது அவர் இயக்குனராக புரமோஷனாகி என்ன தவம் செய்தேனோ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை இணைந்த கைகள் கலைக்கூடம் சார்பில் எஸ்.செந்தில்குமார் தயாரிக்கிறார்.
கஜினி முருகன், விஷ்ணுப்பரியா என்ற புதுமுகங்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ரிஷா, சிங்கம்புலி, ஆர்த்தி, ஆர்.என்.ஆர்.மனோகரன் நடித்துள்ளனர். நவுஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவ்குரு இசை அமைத்துள்ளார்.
"ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் மகளை சைக்கிளில் குச்சி ஐஸ் விற்கும் வாலிபன் காதலிப்பதும். அதனால் வரும் பிரச்சினைளும் தான் கதை. பலம் கொண்ட யானை மாதிரியான வில்லனை சின்ன கட்டெறும்பான ஹீரோ எப்படி தனது புத்தி சாதுர்யாத்தால் வெல்கிறான் என்பது திரைக்கதை. படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது" என்றார் இயக்குனர் முரபாசெலன்.