ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும், கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் - 'மகாநதி'. நாக் அஷ்வின் இயக்கியுள்ள 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழில் மே 11-ஆம் தேதி வெளியாகிறது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தெலுங்கில் உருவாகியுள்ள 'மகாநதி' படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நேற்று வெளியாகி, பாராட்டுக்களை குவித்து வருகிறது.
'மகாநதி' படத்துக்குக் கிடைத்த பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸை தொடர்ந்து நடிகையர் திலகம் படத்துக்கு தமிழில் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் மகாநதி படத்தைப் பார்த்த 'பாகுபலி' பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ஜெமினியாக நடித்த துல்கர் சல்மானை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.