தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. காடுகளை மையப்படுத்தியும், காசியின் வரலாற்றை உள்ளடக்கிய கதையாகயும் உருவாகும் இப்படம் மகேஷ்பாபுவுக்கு 29வது படம். இதற்கிடையே இப்படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்விராஜ் 'கும்பா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டரும் வெளியிட்டனர்.
வரும் நவ.,15ல், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விழாவை ஓடிடி தளத்தில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிப்பரப்ப உள்ளனர். படத்தின் போஸ்டரை 100 அடி உயரமுள்ள எல்இடி திரையில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், எம்.எம். கீரவாணி இசையில் 'குளோப் ட்ரோட்டர்' என்ற பெயரில் படக்குழு ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் உணர்ச்சி பொங்க பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.