தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய் நடித்த ‛புலி' படத்தை தயாரித்தவர் பி.டி. செல்வகுமார் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் பி ஆர் ஓ ஆக, விஜய் மேனேஜராக இருந்தார். புலி பிரச்னைக்கு பின் அவரிடம் இருந்து ஒதுங்கினார். இப்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து, வரும் சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட ஆசைப்படுகிறார்.
சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் நானும் இணைந்து விஜயின் பல நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி இருக்கிறோம். பக்காவாக திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் தவெக.,வில் இருப்பதால் கரூர் சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி விஜய் பற்றி நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி அல்லது வேறு கட்சி, ஏன் தவெக அழைத்தால் கூட அவருடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயார். விஜய்க்கு இப்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.