பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

‛ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழ், தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவை விட்டே ஒதுங்கி துபாயில் செட்டிலாகிவிட்டார். அதேசமயம் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அவ்வப்போது வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் இவர், இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அபத்தமான ஏஐ வீடியோக்களை உண்மையானவையாக காட்டும் இந்தப்போக்கு மிகவும் மோசமானது. இப்போது அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக மாறும்போது அது எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.