ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா |

கன்னட நடிகையான ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தில் நடித்தவர், தற்போது கன்னடத்தில் காந்தாரா சாப்டர் -1, டாக்ஸிக், தெலுங்கில் டிராகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தில் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருக்மணி வசந்த், தனக்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் டிரைலர் செப்டம்பர் 22ஆம் தேதி பிற்பகல் 12. 45 மணிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது .




