தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு இதனை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் "திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கா்நாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது" என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009ம் ஆண்டு காலாமானர். தமிழ் நாட்டில் 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி கடந்த ஜூலை 14ந்தேதி மரணம் அடைந்தார்.