கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
தெலுங்கு திரையுலகில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக, ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்தவர் மகேஷ்பாபு. குறிப்பாக இப்போது வரை ஆக்சன் ரூட்டை விட்டு நகராமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார். அவரது 39வது படமாக தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தொட்டுள்ளார். வயது தான் 50 ஆகிறதே தவிர நாளுக்கு நாள் ஒரு கல்லூரி மாணவரின் தோற்றத்திற்கே மாறிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு குறித்து தனது பிறந்த நாள் வாழ்த்துத் செய்தியில் அதே கருத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் தெலுங்கு சினிமாவின் பெருமை. எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகளை பெற தீர்மானிக்கப்பட்டவர். ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும்போது இன்னும் இளமையாகிக் கொண்டு செல்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான ஒன்றாக அமையட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரும் வாழ்த்தும்போது, “பிறந்தநாள் வாழ்த்துகள் மகேஷ் பாபு அண்ணா.. உங்களது வெற்றிக்காக அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் மகேஷ் பாபு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.