'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா 2010ல் ‛பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றி, தோல்வியை கடந்து நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‛டிஎன்ஏ' படம் இந்தவாரம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அதர்வா 'வலை' எனும் புதிய ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இதில் முதல் முறையாக இவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.