தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அந்தக் காலத்தில் நடிகையான சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயின் ஆனார்கள். அப்படி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது சிறுவனாக நடித்தது உண்டு. ஆனால் ஹீரோயின் ஆகும் வயதில் ஆணாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் விஜய நிர்மலா.
ஆந்திராவை சேர்ந்த அவர் சென்னை, நசரத்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நடனம் கற்று நடிப்பு வாய்ப்பு தேடியபோது அவருக்கு முதன் முதலாக அமைந்த படம் 'மச்சரேகை'. இந்த படத்தில் கதையின் நாயகனாக அதாவது மச்ச ராஜாவாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவரது இளமை பருவ காட்சிகளில், அதாவது இளம் மச்ச ராஜாவாக நடித்தவர் விஜய நிர்மலா. ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்காமல் சுமார் 30 நிமிட காட்சிகளில் அவர் மச்ச ராஜாவாக நடித்தார்.
மச்சராஜா ஜோடியாக முதலில் அஞ்சலிதேவி நடித்தார். பின்னர் என்ன காரணத்தாலோ அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டரில் எஸ்.வரலட்சுமி நடித்தார். 'மச்சரேகை' என்பது தஞ்சை ராமய்யாதாஸ் எழுதி நடத்தி வந்த ஒரு நாடகம். இந்த நாடகத்தை பார்த்த டி.ஆர்.மகாலிங்கம் அதனை திரைப்படமாக்க விரும்பினார். அவரே தயாரித்து, நடித்தார். அவருடன் பி.ஆர்.பந்தலு, குமாரி கமலா, சி.டி.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.புல்லையா இயக்கினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார். 1950ம் ஆண்டு படம் வெளியானது.
விஜய நிர்மலா பிற்காலத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.