'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் |
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியை படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் நரங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். படத்தை முதலில் ஜுலை மாதம்தான் வெளியிடுவதாக இருந்தார்களாம். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் ஜுன் மாதம் 20ம் தேதி படத்தை வெளியிடச் சொன்னார்களாம். அப்படி இல்லாமல் தாமதமாக வெளியிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையில் 10 கோடியை குறைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி பேசும் போது சற்றே கோபமாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சுனில் நரங். முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கிறது என சமீப காலமாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் சுனிலின் பேட்டி நிரூபித்துள்ளது.