2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியை படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் நரங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். படத்தை முதலில் ஜுலை மாதம்தான் வெளியிடுவதாக இருந்தார்களாம். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் ஜுன் மாதம் 20ம் தேதி படத்தை வெளியிடச் சொன்னார்களாம். அப்படி இல்லாமல் தாமதமாக வெளியிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையில் 10 கோடியை குறைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி பேசும் போது சற்றே கோபமாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சுனில் நரங். முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கிறது என சமீப காலமாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் சுனிலின் பேட்டி நிரூபித்துள்ளது.