'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியை படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் நரங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். படத்தை முதலில் ஜுலை மாதம்தான் வெளியிடுவதாக இருந்தார்களாம். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் ஜுன் மாதம் 20ம் தேதி படத்தை வெளியிடச் சொன்னார்களாம். அப்படி இல்லாமல் தாமதமாக வெளியிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையில் 10 கோடியை குறைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி பேசும் போது சற்றே கோபமாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சுனில் நரங். முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கிறது என சமீப காலமாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் சுனிலின் பேட்டி நிரூபித்துள்ளது.