உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 20ம் தேதி வெளியாக உள்ள படம் 'குபேரா'. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதியை படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்தான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் நரங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். படத்தை முதலில் ஜுலை மாதம்தான் வெளியிடுவதாக இருந்தார்களாம். ஆனால், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் ஜுன் மாதம் 20ம் தேதி படத்தை வெளியிடச் சொன்னார்களாம். அப்படி இல்லாமல் தாமதமாக வெளியிட்டால் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையில் 10 கோடியை குறைத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி பேசும் போது சற்றே கோபமாகப் பேசியுள்ளார் தயாரிப்பாளர் சுனில் நரங். முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்கிறது என சமீப காலமாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் சுனிலின் பேட்டி நிரூபித்துள்ளது.