தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 21ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது: படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் தனுஷ் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நிறைய இளம் நடிகர்கள், நடிகைகள் சினிமாவுக்கு வரவேண்டும்.
ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் தனுஷ் விளங்குகிறார். இந்த படத்தை பார்த்தபோது எனது 'குஷி' படத்தை பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. என்றார்.