பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயம் ரவி. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே ஆஜராகி இருந்தார்கள். அப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மத்தியஸ்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட நீதிபதி, ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுங்கள். மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அவர்கள் இருவரிடத்திலும் ஒரு மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அந்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இருவரும் தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக அறிவிப்பார்கள் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.