2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகர் ரவி மோகன் தனது மனைவியை பிரிந்து விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து குற்றம் சாட்டி வந்த நிலையில் கோர்ட் அறிவுரையை ஏற்று இருவரும் விமர்சிப்பதை தவிர்த்தனர்.
இதனிடையே ரவி மோகன் தனது மூத்த மகன் ஆரவின் 15வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளின்போது மகன்கள் ஆரவ், அயான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'என் குறும்பர்கள்' என பதிவிட்டு இருந்தார் ரவி மோகன்.
இந்நிலையில் 'எச்சரிக்கையாக இருக்கவும், சூழ்ச்சி கூட அன்பு போன்று தெரியும்' என இன்ஸ்டாவின் ஸ்டோரியில் பதிவிட்டார் ஆர்த்தி. பின்னர் அதை நீக்கி விட்டார்.